search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி அதிகாரிகள்"

    • கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை கள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 7 பயனா ளிகளுக்கு பால் பண்ணை தொழில் புரிவதற்கும், 4 பய னாளிகளுக்கு வெள்ளாடு கள் வாங்குவதற்கும், 7 பய னாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கும் என மொத்தம் 18 பயனாளி களுக்கு ரூ.21.8 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரி வதற்கான மானிய தொகைக்கான ஆணை களை கலெக்டர் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர்.
    • நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார்(வயது39). தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார்.

    வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது.

    அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் கூறியிருந்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பாபு குமாரின் வீட்டுக்கு நேற்று வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, திடீரென வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது.

    அப்போது தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.

    இதுகுறித்து பாபுகுமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த நாயை மட்டும் 3 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×